×

கோவை அருகே பூனைகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய தம்பதி.!

கோவை; கோவை வேலாண்டிபாளையம் பகுதிதை சேர்ந்த உமா மகேஸ்வர்-சுபா தம்பதியினர் வளர்த்து வரும் ப்ரிஸியன் வகை பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. ஜீரா மற்றும் ஐரிஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள பூனைகளுக்கு ஆர்.எஸ்.புரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் செல்லப்பிராணி நிலையத்தில் இந்த வளைகாப்பு நடைபெற்றது. இதில் பூனைகளுக்கு  கறுப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்கள் அணிவித்து தேன்மிட்டாய், கடலை மிட்டாய், பழங்கள், பிஸ்கட்டுகள், பூனைகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சாக்லெட் ஆகியவை வைக்கப்பட்டு பிரேத்யக உடை அணிவிக்கபட்டு இந்த வளைகாப்பு நடைபெற்றது.  இது குறித்து பேட்டியளித்த உரிமையாளர் ஸ்மித்தி பூனைகள் தங்கள் இல்லத்தில் ஒரு உறுப்பினர் போல் இருப்பதால் இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியதாகவும் கர்பமாக இருக்க கூடிய இந்நாட்களில் சத்து மிகுந்த உணவுகள் சத்து மிகுந்த இறைச்சி வகைகள் அளித்து பார்த்து கொள்வதாக தெரிவித்தார்….

The post கோவை அருகே பூனைகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய தம்பதி.! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Uma Maheswar- ,Subha ,Velandipalayam ,
× RELATED கர்நாடகாவில் இருந்து வாங்கி வந்து...